உன் நெருங்கிய உறவுகளை
மேலும் நன்றாக வைத்திருக்க
மாற்றம் வேண்டும் என்றிருந்தால்
இன் நொடியே மாறிவிடு
மாரடித்துப் பயனில்லை
மாண்டவர் நிலை கண்டு
மாறாக
இருந்த வரையிலும்
நீ அவரைக் கையாண்ட விதம் எண்ணி
நீங்கள் வாழ்ந்த வாழ்வை போற்றி
மகிழ்ச்சியாக வைத்திருந்த தருணங்கள் பூரித்து
மெல்லியதாய்…
புன்னகைத்து வழியனுப்ப
துணிவென்பது உனக்கிருந்தால்
இன் நொடியே முத்தமிடு
நீ கடிந்தவரின் இதயத்தில்
அழுகை ஓலங்கள் அல்ல
அமைதியான புன்னகையைவிட
சிறந்த இறுதி மரியாதை
வேறு என்ன இருக்க முடியும்?
இறப்பு என்பது இயற்கையே
தவிர்க்க இயலாதது
ஆனால்…
கோபம்
கடுஞ்சொல்
ஆணவம்
பிரிவு
இயற்கையானாலும்
அப்படி அல்ல..
வேண்டுவது…
உன்னுள் ஓர் மறுமலர்ச்சியை
காலம் தாழ்த்தாதே
மரணம், காலம் நேரம் பார்ப்பதில்லை
வயது வரம்பற்றது
ஒவ்வொரு முறையும்
பத்திரமாகக் கையாள
உறவுகளும் கண்ணாடிகள்தான்
இரா. ராஜேஷ் குமார்
2 ஏப்ரல் 2018.
நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி…)