RSS

கண்ணாடி

07 Aug

முகம் காட்டும் கண்ணாடி

நீ ஒரு அழகுக் கண்ணாடி

என் மனம் காட்டும் மனிதா!

நீ ஒரு பேரழகுக் கண்ணாடி

 

உள்ளதை உள்ளபடிக் காட்டும் கண்ணாடியே

உன்னில் என்றும் வெறுப்புக் கொள்ளாத நான்

என்னை உள்ளபடிக் காட்டும் உறவே

உன்னில் மட்டும் வெறுப்புக் கொள்வது ஏனோ?

என்னை அங்கீகரிக்க மறுப்பதற்காகவோ?

 

ஒட்டக் கடினமான கண்ணாடித் துகள்களே

நீ உடைந்தால் முயற்சிக் கொள்ளாத நான்

ஒட்டக் கடினமான மனித மனங்களே

நீ உடைந்தால் மட்டும் முயற்சிக் கொள்வது ஏனோ?

என்னை அங்கீகரிக்க மறுப்பதற்காக அல்ல

என்னை மேலும் அறிய வாய்ப்பளிப்பதற்காக

 

ஏதும் சேகரித்துப் பழகாத கண்ணாடியே

உன்னில் ஏதும் வேண்டாத நான்

ஏதும் சேகரித்துப் பழகும் மனிதா

உன்னில் மட்டும் வேண்டிக் கொள்வது ஏதோ?

என்னை மேலும் அறிய வாய்ப்பளிப்பதற்காக அல்ல

என்னை நொடிப்பொழுதும் புதிதாகக் காண்பதற்காக

 

கண்ணாடி அறிவற்றது

நம் எண்ணங்கள் உணர்வுகள் அனுபவங்களை தன்னுள் பதிவாக்கமால்

என்றும் நம்மை புதிதாய் அழைப்பது

மனிதா! அறிவற்றிரு

 

 

 
4 Comments

Posted by on August 7, 2016 in கவிதை

 

Tags: , , ,

4 responses to “கண்ணாடி

  1. Vimal

    August 7, 2016 at 8:46 am

    கண்ணாடி அருமையான வரிகள்…….

    Like

     
    • Anonymous

      August 11, 2016 at 4:37 am

      I like these lines…
      என்னை உள்ளபடிக் காட்டும் உறவே
      உன்னில் மட்டும் வெறுப்புக் கொள்வது ஏனோ?

      Like

       
      • Rajesh kumar R

        August 11, 2016 at 2:05 pm

        Thanks Arun for your encouragements. Can’t forget your valuable critics and the long open discussion in person we had the other day regarding oru camaravin eakkam short story.

        Like

         
  2. Rajesh kumar R

    August 7, 2016 at 10:57 am

    Thanks da Vimal.

    Like

     

Leave a comment